Tuesday, August 19, 2008

தாஃவா - அழைப்புப் பணி

இன்று உலகில் எண்ணற்ற மக்கள் வாழ்க்கையில் வெறுப்புற்று, நம்பிக்கையிழந்து, நிம்மதியின்றி அமைதியை தேடி ஓடுகின்றனர். ஆனால், அவர்களுக்கு அமைதி கிடைத்தபாடில்லை. ஏனென்றால், அவர்கள் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்காதவரை, அமைதி பெறமாட்டார்கள். முஸ்லிம்கள் தங்களுடைய முழுமுதற்கடமையை செய்யத்தவறியதன் விளைவே இது. தாஃவா – அழைப்புப்பணியை அவர்கள் சரிவர செய்யவில்லை.

தாஃவா என்பது மக்களை அல்லாஹ்வின் பால் அழைப்பது. வணக்க, வழிபாடுகளை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்வது. அவன் காட்டித்தந்த சீரிய வழியின்பால் வாழ்வது, தீமை மற்றும் இணைவைப்பதைவிட்டும் முற்றிலுமாக விலகுவது ஆகும். இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் - சூரத்துல் அன்பியா – நபிமார்கள் குறித்த அத்தியாயம் 21:வசனம் 25
"(நபியே!) உமக்கு முன்னர் இப்பூவுலகில் வாழ்ந்த நம் தூதர்கள் அனைவரும் உமக்கு வஹீயாக கிடைத்த அதே செய்தியையே அவர்களும் பெற்றார்கள். அதாவது "வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை ஆகவே, அவனுக்கே முற்றிலும் வழிபட்டு நடங்கள்"

எனவே, தாஃவா என்பது மக்களுக்கு புரியக்கூடிய விதத்தில், சரியான மொழியில், அவர்கள் திருப்தி கொள்ளுமாறு அமைய வேண்டும். மேலும், அவர்கள் மேல் உள்ள அன்பின் காரணமாக, அவர்களும் நம்மைப் போன்று நேர்வழியல் சென்று, நாளை மறுமையில் நம்மருகே செர்க்கத்தில் இருக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும் தாஃவா செய்ய வேண்டும். இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான், சூரத்துன் நஹல் - தேனீக்கள் பற்றிய அத்தியாயம் 16:வசனம் 125

நபியே நீர் மனிதர்களை விவேகத்தைக் கொண்டு மற்றும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமதிரட்சகனின் பக்கம் அழைப்பீராக - அன்றியும் எது அழகானதோ அதைக் கொண்டு நீர் அவர்களுடன் விவாதம் செய்வீராக!



மேலும் சூரத்துல் ஃபுஸ்ஸிலத் அத்தியாயம் 41:வசனம் 33ல் இறைவன் கூறுகின்றான்

யார் அல்லாஹ்வின்பால் மக்களை அழைத்து, நல்ல அமல்களை செய்து, "நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட முஸ்லிம்களில் நின்றும் உள்ளேன்" என்று கூறுகிறாரோ அவரை விட அழகிய சொல் சொல்பவர் யாருமில்லை

ஆக, இந்த தாஃவா பணியை தனிநபராகவோ அல்லது கூட்டமைப்பாகவோ இருந்து செய்யலாம். தனிநபராக இருந்து செய்வது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், அந்நபர் இஸ்லாம் குறித்த தெளிவான அறிவு பெற்றவராக இருத்தல் வேண்டும். கூட்டமைப்பாக செய்பவர்கள் ஒரு அழைப்பு மையத்தை இஸ்லாமிய அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூகவியாலர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு அமைக்க வேண்டும். அவர்கள் சொற்பொழிவுகளுக்கு, விவாதங்களுக்கு, ஆராய்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு வருடம் முழுவதுமுக்குரிய செயல்களை வகுத்து ஒரு செயல் திட்டம் ஏற்படுத்த வேண்டும். பிற சமயத்தவர்கள் மற்றும் பிறபகுதியிலுள்ள அழைப்பாளர்கள் எந்நேரமும் அணுகி தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் விதமாக செயல்பட வேண்டும். புத்தகங்கள், ஆடியோ, வீடியோ கேஸட்;டுகள் கொண்ட நூலகம் ஏற்படுத்த வேண்டும்.

தாஃவாவின் முதல் பணியாக கலிமா ஸலவாத்தை எடுத்துரைக்க வேண்டும்.

வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தூதராகவும், நல்லடியாராகவும் உள்ளார் என்பதாகும். முதலில் கூறவேண்டியது:

1) அல்லாஹ் இருக்கின்றான், அவன் தனித்தவன் (இணைதுனையற்றவன்), அவன் பண்புகள்

2) முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மை, உண்மை

3) திருக்குர்ஆன் கூறும் விஞ்ஞான அற்புதங்கள், எவ்வாறு அவை பிற்காலத்தில் நிரூபிக்கபட்டன அது உலக மாந்தருக்கு விடும் சவால் 'இது போன்ற புத்தகத்தை உங்களால் இயற்ற முடி யுமா?" என்பது

4) மறுமை நாள், மறுமைய வாழ்க்கை, மீண்டும் அனைவரும் உயிர்தெழுப்பப்படுவது, நியாய தீர்ப்பு வழங்குவது

5) முஹம்மது ரஸ_ல்(ஸல்) அவர்களின் தோழர்களுடைய சிறப்புகள், தியாகங்கள்

6) இஸ்லாமிய வாழ்க்கை முறை, அன்றாட பிரச்சனைகளுக்குரிய தீர்வுகள்

7) இஸ்லாம் உலகில் ஏற்படுத்திய புரட்சி, தாக்கம்

· சர்ச்சைக்குரிய விசயங்கள், அரசியல்ஈ மற்றும் முஸ்லிம்கள் நம் நாட்டில் படும் துன்பங்கள குறித்தெல்லாம் பேசி நேரத்தை வீணடிக்கக் கூடாது

· நாம் அறியாத விசயங்கள் குறித்து பேசுவதும் கூடாது

· நாம் கூற விரும்புவதை தெளிவாக அழகிய முறையில் எடுத்துக் கூறவேண்டும்.

· நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும்

· நல்லமுறையில் அவர்களிடம் விவாதம் செய்யவேண்டும். நாம் அளிக்கும் பதில் அவர்களை திருப்தி செய்யுமாறு இருக்க வேண்டும்

· தவறுகளை பொறுக்க வேண்டும். பொறுமையோடு அவர்கள் கூறுவதை செவிமடுக்கவேண்டும்

· குர்ஆன் மற்றும் புத்தகங்களை பரிசாக அளிக்கவேண்டும்

· வீண் விமர்சனங்களை ஒதுக்கித் தள்ள வேண்டும்

· இஸ்லாத்தை மற்றும் நம்மை பிறர் ஏசினால் பொறுமை காக்கவேண்டும்

· உங்கள் சொற்பொழிவில் முரண்பாடு இருக்கவே கூடாது

· நீங்கள் கூறுபவற்றை நீங்கள் பின்பற்றுபவராக இருக்க வேண்டும். உதாரணம்: தாடி

· வாக்கு தவறாமை கடைபிடிக்கவேண்டும்

· நாம் அறியாத விசயங்களைக் குறித்து கேட்கப்பட்டால் எதையேனும் கூறி அவர்களை குழப்புவதை விட்டுவிட்டு 'எனக்கு தெரியாது படித்துவிட்டு கூறுகிறேன்" என்று கூறுவதே நேர்மையான சிறந்த பதிலாகும்.

இஸ்லாம் குறித்து பிற சமயத்தவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை இங்கு கூற விரும்புகிறேன்.

1. இஸ்லாம் என்பது முற்றிலுமாக அல்லாஹ்விற்கு அடிபணிவது

2. அல்லாஹ் என்பது 'ஒரே கடவுள்" என்பதற்குரிய அரபிச் சொல். அவன் முஸ்லிம்களுக்கு மாத்திரமல்லாது உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளின் இறைவன் ஆவான்.

3. இஸ்லாம் முஹம்மது ரஸ_ல்(ஸல்) அவர்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மார்க்கம் அல்ல. ஆதி மனிதர் ஆதம்(அலை) முதல், முதல் நபி நூஹ்(அலை) தொடர்ந்து வந்த அனைத்து தூதர்களும் போதித்த மார்க்கம் ஆகும்

4. இஸ்லாம் என்பதன் உண்மையான அர்த்தம் சாந்தி, மற்றும் சமாதானம் என்பது குறித்து எடுத்துக் கூறுவது

5. குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வாக்கு. மனித குலத்திற்கு அவன் அருளிய இறுதிச் செய்தி

6. இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை. ஏற்றத்தாழ்வு இல்லை, அனைவரும் சமம்

7. இஸ்லாம் எளிய மார்க்கம், சகிப்புத் தன்மையை வலியுறுத்துகிறது.

8. தனிமனித உரிமைகளை இஸ்லாம் பேனுகிறது. நியாயத் தீர்ப்பு நாளின் முக்கியத்துவம் - ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியாது

9. இஸ்லாம் மனிதனின் உடல்ரீதியான வெளிப்படையான பிரச்சனைகளுக்கும் உள்ள ரீதியான ஆன்மீகப் பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது

10. சில சமூக, நாட்டில் நிலவும் பழக்க வழக்கங்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை

11. இன்றைய சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளான வறுமை, வன்முறை, வீடற்றோர், கொலை, கொள்ளை, பாலியல் நோய்கள், மனைவியை துன்புறுத்துவது, குழந்தைகளை வதை செய்வது, குடி, போதை, விபச்சாரம் மற்றும் குடும்பத்தில் பிளவு போன்ற அனைத்துவிதமான பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் தீர்வு தருகிறது

12. பெண்களுக்கு தனி அந்தஸ்து, கௌரவம் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப் பட்டுள்ளது. பெண்கள் குறித்து ஒரு தனி அத்தியாயமே உள்ளது

சூரா முஹம்மது(ஸல்) அத்தியாயம் 47: வசனம் 38



அவனுடைய கட்டளைகளை நீங்கள் புறக்கணிப்பீர்களானால் உங்களை அழித்து உங்களையல்லாத வேறு சமூகத்தாரை உங்கள் இடத்தில் அவன் மாற்றிவிடுவான். பின்னர் அவர்கள் உங்களைப் போன்றவராக இருக்கமாட்டார்கள்.

தாஃவா செய்யும் முறைகள், உத்திகள் என்னவென்றால்

1. சிறு சிறு பிரசுரங்கள் பல்வேறு தலைப்புகளில் WAMY, saudi வெளியிடுவது. போன்று. இது போன்ற பிரசுரங்கள் வெளியிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம், வார்த்தைகள் அரபியில் இல்லாது அந்தந்த மொழியில் இருத்தல் வேண்டும். உதாரணம் - அல்லாஹ் - இறைவன், ஈமான் - நம்பிக்கை, தக்வா - இறையச்சம், பயபக்தி, நிக்காஹ் - திருமணம், நபி - இறைத்தூதர்

2. புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளில் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் வெளியிடுவது

3. பிரசுரங்கள், புத்தகங்களை கிறித்துவர்கள் போன்று நாமாக சென்று பேருந்து நிலையம், இரயில் நிலையம், ஜன நடமாட்டம் உள்ள மார்க்கெட் போன்ற இடங்களில் விநியோகிப்பது

4. புத்தகத்திருவிழா - Book Fair-ல் ஒரு கடையைப் பிடித்து விலை கூடுதலாக உள்ள இஸ்லாமிய புத்தகங்களை சலுகை விலையில் விற்பது – சில சிறு புத்தகங்களை இலவசமாக அளித்து வாங்கத் தூண்டுவது.

5. தெருமுனைப் பிரச்சாரம் - தி.க, கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் போன்று சிறிய நாற்காலியில் மெகா போனுடன் பிரச்சாரம் செய்வது - குறிப்பாக ஜனநடமாட்டம் உள்ள இடங்கள் மற்றும் ஏழை மக்கள் (தலித்) வாழும் சேரிகளில் நடத்துவது

6. ஈத் பெருநாளை முன்னிட்டு பிறசமுதாயத்தவரை அழைத்து விருந்து பரிமாறி பிரசங்கம் செய்வது, கேள்வி-பதில் நிகழ்ச்சி நடத்துவது

7. மீலாது நபி விடுமுறையை பயன்படுத்தி முஹம்மது ரஸ_ல்(ஸல்) அவர்களைப்பற்றி எடுத்துக் கூறுவது

8. கேபிள் டிவி நெட்வொர்க்கை பயன்படுத்தி தினமும் இஸ்லாமிய சொற்பொழிவு கேஸட்டுகளை ஒளிபரப்புவது - Dr. ZAKIR NAIK மும்பையில் செய்வது போன்று.

9. ரமளான் மாதத்தில் அனைத்து இயக்கத்தினரும் தனித்தனியாக ஸஹர் நேரத்தில் ஒளிபரப்பாது, மதியம் ஒன்று இரவு ஒன்று என இஸ்லாமிய ஒளிபரப்பு - குறைந்தபட்சம் அரை மணி நேரம், விளம்பரம் எதுவும் இடையில் இல்லாது, இயக்கப் பெயர், தனிநபர் பெயர் இல்லாது நடத்துவது

10. மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பிறசமுதாயத்தவரை அழைத்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துவது

11. வருடம் ஒரு முறை அல்லது இருமுறை இரத்ததான, மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து, அந்நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு சமயத்தவர்களை அழைத்து, அதில் பிரசங்கம் செய்துவிட்டு நிகழ்ச்சியை நடத்துவது

12. மாதந்தோறும் ஏதேனும் ஒரு மருத்துவமனைக்கு சென்று கிறித்துவர்கள் போன்று நோயாளிகளை நலம் விசாரித்து ஆறுதல் கூறி பிரச்சாரம் செய்வது

13. இயற்கை சீற்றங்களால் மக்கள் அவதிப்படும் நேரம் அங்கு முஸ்லிம் என்ற அடையாளத்தோடு சென்று மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணப்பணிகளை மேற்கொள்வது. உதாரணம்- பூஜ், குஜராத் பூகம்ப நிவாரணம் - முஸ்லிம் இளைஞர்கள் இரத்த தானம், இந்துக்களுக்கு தாமாக முன்வந்து செய்ததன் விளைவு - தொழுகை நடத்த விடாமல் தடுக்கப்பட்ட பள்ளிவாசல் இந்துக்களால் முஸ்லிம்களுக்கு திறந்து விடப்பட்டது.

14. முக்கிய செய்தித்தாள்களில் வாரம் ஒரு முறை முக்கிய தலைப்பின்கீழ் ஹதீஸ்களை வட்டார மொழியில் ஒரு தலைப்பின்கீழ் முதல் பக்கத்தில் வெளியிடுவது - உதாரணம் தினமணி - IFT வெளியீடு

15. ஒவ்வொரு ஊரிலும் ஒரு பொது பெயரில் நூலகம் ஒன்றை ஏற்பாடு செய்து இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் பொது புத்தகங்களை அனைவரும் (அனைத்து சமயத்தவரும்) வந்து படிக்குமாறு ஏற்பாடு செய்வது. உதாரணம் - சகோ. அபுஆஸியா நாகர்கோவிலில் "The Truth" என்ற பெயரில் நூலகம் திறந்து உள்ளார்.

மாற்றப்படவேண்டிய அழைப்பியல்முறை

அல்லாஹ்வின் மார்க்கத்தை பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற ஆவல் அல்ஹம்து லில்லாஹ் இன்று எல்லோரிடமும் பரவலாக காணப்படுகிறது. தனி நபர்களாகவும், பல குழுக்களாகவும் நாம் இந்த இஸ்லாமிய அழைப்புப்பணியை செய்து வருகிறோம். ஆனால், அன்று சஹாபாக்கள் காலத்தில் இஸ்லாம் பரவியது போல இன்று பரவுவதில்லை. அன்று மக்களை இஸ்லாம் ஈர்த்தது போல் இன்று ஈர்க்கவில்லை. இஸ்லாம் ஏனைய மார்க்கங்களைப் போல இடைச் செருகல்களுக்கும், மாற்றத்திற்கும் ஆட்பட்டுவிட்டதா என்றால் அதுவும் இல்லை. பிறகு இதற்கு காரணம் என்ன?

இஸ்லாம் ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டிலேயே அன்றைய நிலப்பரப்பில் மூன்றில் இருபங்கை தன்வயப்படுத்தியது. கொள்கையிலும், வணக்க வழிபாடுகளிலும் எவ்வித மாறுதல்களுக்கும் உட்படாத அதே இஸ்லாம் தான் இன்றும் இருக்கிறது. இத்தனைக்கும் அன்றைய காலத்தில், டிவி, ரேடியோ, பத்திரிக்கை, இன்டர்நெட் போன்ற எவ்வித தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லை. அப்படியென்றால் வேறெங்கோ எங்கோ கோளாறு இருக்கிறது. ஆமாம் நாம் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதில் தான் கோளாறு செய்கிறோம். நாம் எதை இஸ்லாம் என்று மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறோம். எதனை மையப்படுத்தி இஸ்லாமை மக்களிடம் கொண்டு போகிறோம் என்பதை கவனமாக ஆராய வேண்டும்.

இன்று இஸ்லாம் தான் மிகவும் வேகமாக பரவுகிறது. வுhந குயளவநளவ புசழறiபெ சுநடபைழைn in றுழசடன என்று கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். அன்புச் சகோதரர்களே, நாம் உண்மையான இஸ்லாமை சரியான வடிவில் முறையாக மக்களிடம் சொன்னால் இன்னும் இப்படிப்பட்ட வார்த்தைகளையும், வாக்கியங்களையும் கேட்டுக் கொண்டேயிருக்க மாட்டோம். ஏன்? மக்கள் மாக்களிலிருந்து மக்களாகியிருப்பார்கள். தஅவாவைக் காட்டிலும் இஸ்லாஹ்வே எஞ்சியிருக்கும்.

உலகில் காணப்படும் சமயங்களோடு பத்தோடு பதினொன்றாக இருக்கட்டும் என்றெண்ணி அல்லாஹ் இஸ்லாமை இறக்கவில்லை. அனைத்து மார்க்கங்களைக் காட்டிலும் மேலோங்க வேண்டும் என்பதற்காக இறக்கி வைத்தான். ஆனால், இன்று உலகில் உள்ள மதங்களில் இஸ்லாமும் ஒன்று என்கிற நிலைமைதான் உள்ளது.

1. நமது மக்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆதாரமாகக் கொண்டு இதுவே உண்மையான மார்க்கம், அறிவியல் பூர்வமான மார்க்கம் என்று இஸ்லாமை அறிமுகப்படுத்துகிறார்கள்.

2. யாரேனும் பிரபலங்கள் இஸ்லாமை தழுவினால் அவர்களின் புகழை பெரிதுபடுத்தி இஸ்லாமை சரியான மார்க்கம் என்று சித்தரிக்க முயல்கின்றனர்.

3. அல்லது பிரபலமானவர்களின் இஸ்லாமைப் பற்றிய அபிப்பிராயங்கள் அவர்களது பேட்டிகள், பாராட்டுகள், கருத்துகளை முன் வைத்து இஸ்லாமை உயர்த்திக் காட்ட முற்படுகின்றனர்.

4. இஸ்லாமின் அழகான வழிபாடுகளையும் அதன் அழகான வழிமுறைகளையும் விளம்பரப்படுத்தி அதன் வாயிலாக இஸ்லாமை மற்றவர்களுக்கு பிரச்சாரம் செய்கின்றனர்.

மேற்கண்ட இந்த நான்கு வகையான வழிமுறைகளை கையாண்டே இன்று உலகம் முழுவதும் இஸ்லாம் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இது தவிர இன்னும் சிலர் இஸ்லாமின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கும், ஆட்சேபணைகளுக்கும் பதிலளிக்கும் வகையில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்கிறார்கள்.

குர்ஆன் வசனங்களை இறைவசனங்கள் என்று மெய்ப்பிக்க கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் குர்ஆன் வசனங்களோடு ஒத்ததாக அமைந்துள்ளமையை காண்பிக்கின்றனர். 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டவை இன்று இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் ஆராய்ச்சி செய்து மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே சாதாரணமா ஒரு மனிதர் இதைக் கூறியிருக்க முடியாது. முக்காலமும் அறிந்த இறைவனே இதை கூறியிருக்க முடியும். குர்ஆன் இறைவன் வாக்கேயாகும் என்று நிரூபிக்கிறோம். உண்மையில் கடந்த நூற்றான்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல அறிவியல் உண்மைகள் குர்ஆனில் சொல்லப்பட்டவையே. ஆனால் இதை வைத்து குர்ஆன் இறைவனின் வேதம், இஸ்லாம்தான் சரியான மார்க்கம் என்று நாம் இஸ்லாமை அறிமுகப்படுத்தக் கூடாது. அறிவியலில் இன்று வரை பல விஷயங்கள் குர்ஆனிற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளன. மனித படைப்பை இதற்கு உதாரணமாக கூற முடியும். இதனால் குர்ஆனுடைய கருத்துகள் பின்னுக்கு தள்ளப்பட்டு விடும் அபாயம் உள்ளது. இஸ்லாமில் எத்தனையோ வழிபாடுகள், அறிவுரைகள், அறிவியல்பூர்வமாய் அமைந்துள்ளது நாம் இதனை அறிவியலின் துணை கொண்டு மக்களிடம் கொண்டு செல்லும் போது அறிவியலை முதன்மைப்படுத்தியும் முக்கியப்படுத்தியும் விடுகிறோம். இவ்வாறு நம்மையும் அறியாமல் அறிவியலை புனிதமாக்கி உயர்ந்த அந்தஸ்த்திற்கு கொண்டு சென்று விடுகிறோம். இதனால் இஸ்லாமின் ஏதாவது ஒரு வழிகாட்டுதல் விஞ்ஞானத்திற்கு முரணாக இருந்தால் அதைப் புறக்கணிக்கும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதனை செயல்படுத்த முன்வரும் மனிதன் விஞ்ஞானத்தின் அடிப்படையில் அச்செயல் அமைந்துள்ளதால் அதனை செய்ய முன்வருகிறான். அல்லாஹ்வும், அவன் தூதரும் ஏவி இருக்கிறார்கள் என்பதை இரண்டாம் பட்சமாகவே எண்ணுகிறான். சரியோ தவறோ, நன்மையோ தீமையோ தலைவன் ஏவியதற்கு அடிபணிவதையே வழிபடுதல் என்கிறோம். இங்கே அத்தன்மை ஒளிந்து கொள்வதை பார்க்கிறோம். குர்ஆன் அறிவியல் கண்டுபிடிப்புகளின் புதையலோ, விஞ்ஞானத்தின் முன்னறிவிப்போ அதன் வழிகாட்டியோ அல்ல. அது வாழ்வியல் வழிகாட்டி புத்தகம்.

இன்று கண்டறியப்பட்டுள்ள குர்ஆனோடு ஒத்ததாக அமைந்துள்ள விஞ்ஞான உண்மைகளை நாம் சத்திய மார்க்கத்திற்கு சான்றாக கொள்ளலாம். அவற்றை வைத்து இஸ்லாம் அறிவியல் மார்க்கம், இஸ்லாம் விஞ்ஞான பூர்வமான மார்க்கம் என்று இஸ்லாமை அறிமுகப்படுத்துவது சரியாகாது

1. தும்மினால் நாங்கள் அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என்று சொல்கிறோம். ஏன் என்றால் தும்மும் போது எந்நேரமும் சதா இயங்கிக் கொண்டிருக்கும் இதயம் கண நேரம் நின்று விடுகிறது. பிறகு உடனே அதற்கு உயிர் கொடுத்து இயங்க வைத்த அல்லாஹ்விற்கு நன்றி கூறும் விதமாக நாங்கள் இவ்வாறு கூறுகிறோம்.

2. தூங்கும் போது வலது பக்கம் ஒருக்களித்து உறங்குமாறு எங்களுக்கு நபிகள் நாயகம்(ஸல்) வழிகாட்டியுள்ளார்கள். இடது பக்கம் இதயம் உள்ளது. ஆகவே இடது பக்கமாக உறங்கினால் இதயத்தின் செயல்பாடு பாதிக்கும். உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராகாது. உடல் நலம் கெடும் வாய்ப்பு உள்ளது என்று இன்றைய அறிவியல் கூறுகின்றது.

அவ்வாறே உறங்கும் முன் முப்பத்திமூன்று தடவை சுப்ஹானல்லாஹ் அதே எண்ணிக்கையில் அல்ஹம்துலில்லாஹ் மற்றும் அல்லா{ஹ அக்பர் என்று கூறுவது நபி வழி. இன்றைய அறிவியல் உறங்கும் முன் கண்ணை மூடிக் கொண்டு எவர் நூறு வரை எண்ணி உறங்குகிறாரோ அவருக்கு ஆழ்ந்த உறக்கமும், வேலைப் பளுவின் களைப்பும் மறைந்து விடுகிறது என்று கூறுகின்றது.

3. சிறுநீர் கழிக்கும் போது உட்கார்ந்து கழித்தால் சிறுநீரகத்திலிருந்து முழுமையான அளவில் சிறுநீர் வேளியேறிவிடுகின்றது என்று அறிவியல் கூறுகின்றது. அதே போல் மனிதனுக்கு கோபம் வந்தால் அமர்ந்து கொள்ளட்டும். அமர்ந்து இருந்தால் படுத்துக் கொள்ளட்டும். அவர் ஒழு செய்யட்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இதையே அறிவியலும் தண்ணீர் குடிக்கட்டும், தண்ணீர் அலம்பட்டும் என்று கூறுகின்றது.

இவ்வாறு இஸ்லாத்தின் எல்லா வழிபாடுகளும் வழிகாட்டுதல்களும் அறிவியலாய் அமைந்துள்ளன என்று நாம் பிரச்சாரம் செய்கிறோம். இதை முன்வைத்து நீங்கள் இஸ்லாமிற்கு வந்தீர்களென்றால் உங்கள் வாழ்வு அறிவியல் படி நலமாய் அமையும். உங்களுக்கு மருத்துவச் செலவே இருக்காது என்று நாம் இஸ்லாமை அவர்களுக்கு எத்தி வைக்கிறோம்.

ஹிந்து மதத்தின் வழிபாடுகளிலும் எத்தனையோ அறிவியல் உண்மைகள் உள்ளன. வீட்டு முற்றத்தில் மாட்டுச் சாணி தெளிப்பதால் எத்தனையோ பூச்சிகள், விஷஜந்துக்கள் வீட்டை அண்டாது. முகத்திற்கு மஞ்சள் பூசுவதால் முகக் கிருமிகள் இறந்து போகின்றன. முகத்திற்கு பொலிவு கிடைக்கின்றது சூரிய நமஸ்காரம் செய்யும் போது அதிகாலை வெயில் உடல் மேல் படுவதால் வைட்டமின் ‘நு’ சக்தி கிடைக்கின்றது. நெற்றியில் திருநீர் பூசுவதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு சமூகத்தின் கலாச்சாரத்திலும் பழக்க வழக்கங்களிலும் ஏதாவது ஒரு வகையில் அறிவியல் ரீதியான நன்மைகளும், மருத்துவபலன்களும் இருக்கத்தான் செய்கின்றன. நாம் ’அறிவியல்பூர்வமாய்’ என்று மக்களிடம் இஸ்லாமை கொண்டு சென்றால் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தத்தமது பழக்க வழக்கத்தில் இருக்கும் அறிவியலை கண்டு தம் மதத்தையே பெருமையாக கொள்வர். இது அவர்களை மேலும் வெளியே வர முடியாதபடி செய்து விடும்.

இவற்றையெல்லாம் நாம் நமது மக்களிடம் சொல்லலாம். நம்மை நாமே திருப்திப்படுத்திக் கொள்வதற்காக இவற்றைச் சொல்வதில் தவறில்லை. பறவை இறைச்சிக்கு உயிரூட்டி இப்ராஹிம் (அலை) அவர்களது ஈமானையும், மிஃராஜ் மூலமாக முஹம்மத் (ஸல்) அவர்களின் ஈமானையும் அல்லாஹ் திருப்தி அடையச் செய்தான். அவர்கள் இறைத்தூதர்கள். அல்லாஹ்வின் அருளை நேரில் கண்டவர்கள். நாம் கொள்கையளவில் இஸ்லாமை அதன் ஏவல், விளக்கங்களில் நன்மை இருக்கின்றதா? என்று நாம் பார்ப்பதில்லை. நோன்பு வைப்பதால் இன்ன மருத்துவ பலன் இருக்கிறது என்பதால் நோன்பு நோற்பதில்லை. கேட்டோம், கட்டுப்பட்டோம் என்கிற அடிப்படையிலே நாம் வழிபட்டு கொண்டு இருக்கிறோம். இதுதான் உண்மையான ஈமானும் கூட. அதே வேளையில் உலகியல் அடிப்படையில் சில நன்மைகளும் இருக்கும் போது நமது மனம் திருப்தி அடைகின்றது. செய்யும் காரியத்தில் ஒரு ஆர்வமும், உறுதியும் ஏற்படுகின்றது. ஆகவே இதை நம் மக்களிடம் சொல்லலாமே தவிர இதை வைத்து பிற மக்களிடம் இஸ்லாமை அறிமுகப்படுத்தலாகாது.

கேரள பிரபல இலக்கியவாதி கமலா சுரைய்யா (மாதவி குட்டி) பிரபல மேற்கத்திய பாப் இசைப் பாடகர் யூசுப் இஸ்லாம் போன்றோரின் இஸ்லாமிய தழுவலை அவர்களின் பிரபலத்தை முன்வைத்து இஸ்லாமை பிறருக்கு பிரச்சாரம் செய்கிறோம். இத்தகைய பிரபல மனிதர்கள் இஸ்லாமை தழுவியிருக்கிறார்கள். நீங்களும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்.

சிலர் இஸ்லாமிற்குள் வராவிட்டாலும் இஸ்லாமைப்பற்றி தங்களது நல்ல அபிப்பிராயங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அதன் கொள்கையைப் பற்றியும், போதனைகளைப் பற்றியும் அது ஏற்படுத்திய சமூக மாற்றத்தைப் பற்றியும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

இனஒழிவிற்கு இஸ்லாமே அருமருந்து என்று பெரியார் ஈ.வே. ராமசாமியும் முஹம்மத் இன்று இருந்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டிருப்பார் என்று ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறியிருக்கிறார். இது போன்று எத்தனையோ தலைவர்கள் இஸ்லாமை தழுவாவிட்டாலும் இஸ்லாமை போற்றியிருக்கிறார்கள்.

இவர்களது பேட்டிகளையும், அறிக்கைகளையும் முன்வைத்து இஸ்லாமை பிரச்சாரம் செய்வது சரியான செயலாகாது. இப்படிப்பட்ட பிரபலமானவர்களின் நற்கருத்துக்களை மக்களிடம் சொன்னால் மக்கள் இஸ்லாமை ஆர்வத்தோடு படிப்பார்கள். இஸ்லாமினுள் நுழைவார்கள் என்று நம்புகிறோம். உண்மையில் சகோதரர்களே! இதனால் அவர்களுக்கு இஸ்லாத்தின் மீது நன்மதிப்பே ஏற்படுத்துமே தவிர அவர்களை இஸ்லாமிற்குள் நுழைக்கச் செய்யாது. சாதாரணமான ஒருவருடைய மனதில் " அவர்கள் (அந்த பிரபலங்கள்) உண்மையானவர்களாக இருந்தால் இஸ்லாமை தழுவியிருக்கலாமே" என்ற எண்ணம் கண்டிப்பாக தோன்றும்.

அருமைச் சகோதரர்களே! நாம் இஸ்லாமை இவ்வாறு கொண்டு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இத்தகைய கவர்ச்சி நாயகர்களின் வசீகர பேச்சுக்கள் இஸ்லாமை அறிமுகப்படுத்த தேவையே இல்லை. இஸ்லாமே கவர்ச்சி மார்க்கம், உண்மையான இஸ்லாமை மக்களிடம் சொன்னாலே மக்கள் சாரை சாரையாக வருவார்கள். அதன் கடவுட் கொள்கை ஒன்றே போதும்.

இன்னுஞ் சிலர் இஸ்லாமின் அழகான வழிபாடுகளையும் அதன் அழகான அறிவுரைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி அழைப்புப் பணி செய்கிறார்கள். தொழுகை, நோன்பு போன்ற வழிபாடுகளின் அழகையும், அதன் செயல் வடிவ வசீகரத்தையும், கல்விக்கு இஸ்லாம் அளித்துள்ள முக்கியத்துவம், தாயை பேணுவதற்கான கட்டளைகள். இன்னும் எத்தனையோ சமூக சீர்திருத்த கருத்துகள், மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற அழகான அறவுரைகளை எடுத்துக் கூறி இஸ்லாமை பிரச்சாரம் செய்கிறார்கள். எத்தனையோ பேர் இதைக் கேட்டு இஸ்லாமிற்குள் வருகிறார்கள். பிரியாணியை உண்டு, ஒரு சமூகத்தின் உணவே இவ்வளவு ருசியாக இருக்கும் போது அச்சமூகத்தின் கருத்துக்களும் வழிமுறைகளும் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கருதி இஸ்லாமை ஏற்றுக் கொள்ளும் சாதாரண மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இஸ்லாமில் தீண்டாமை இல்லை என்று கருதி இஸ்லாமினுள் வருகிறார்கள். இவ்வாறு எவ்வளவோ அழகான நெறிமுறைகள் தாங்கிய மார்க்கமாக இஸ்லாம் இருக்கின்றது. ஆனால் இதை மட்டும் கருத்தில் கொண்டு இஸ்லாமைத் தழுவியவர்களிடம் அவ்வளவு கொள்கை பிடிப்பு இருக்காது. நிலைகுலையாமை இருக்காது. "உலகில் எத்தனையோ நல்ல கருத்துகளை மதங்கள் கூறுகின்றன. அவற்றுள் இஸ்லாமும் ஒன்று. இஸ்லாமும் சிலவற்றை கூறுகின்றது!" என்ற கருத்தோட்டத்தையே இது பலரிடம் ஏற்படுத்தி விடும். இந்த நல்ல அறிவுரைகளுக்காக இஸ்லாமை தழுவ வேண்டிய அவசியம் இல்லை என்கிற எண்ண நிலைப்பாட்டை தோற்றுவித்துவிடும்.

அருமைச் சகோதரர்களே! உலகில் நல்ல அறவுரைகளுக்கும், தத்துவங்களுக்கும் பஞ்சமில்லை. எல்லா சமயங்களிலும் நல்ல அறவுரைகள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் நல்ல அறவுரைகளை மையப்படுத்தி இஸ்லாமை கொண்டு சென்றால் மக்கள் அதைப் போற்றத்தான் செய்வார்களே தவிர இதற்காக ஒரு மதத்தை தழுவி அதில் கட்டுண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றே பெரும்பாலான மக்கள் கருதுவார்கள்.

இஸ்லாம் ஓர் அழகான வாழ்க்கை நெறியாக உள்ளது. அது மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் வழிகாட்டும் நெறியாக உள்ளது என்று கூறுகிறோம். தனிமனித, மற்றும் பொதுவாழ்க்கை என எல்லா விஷயங்களிலும் மனிதன் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இஸ்லாம் தீர்வளிக்கிறது என்று பிரச்சாரம் செய்கிறோம்.

இது உண்மை என்றாலும் இதை நாம் அழைப்புப்பணியின் பிரச்சார வழிமுறையாக கொள்ளக்கூடாது. இது ஒரு வகையில் கிறித்தவ மிஷினரிகளின் பிரச்சார வழிமுறையை ஒத்ததாக அமைந்திருக்கின்றது. அவர்கள் தான் "நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டீர்களானால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். நோய், நொடிகள் குணமாகும். கடன் தொல்லைகள் தீரும். முடவர்கள் நடப்பார்கள். மனநிம்மதி கிடைக்கும்!" என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

மார்க்கத்தின் கவர்ச்சியே கலிமத்து தய்யிபாதான். அந்த "லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்"வை பிரச்சாரம் செய்தாலே நமக்கு போதுமானது. அதற்கு இருக்கும் வசீகரத் தன்மை வேறு எந்த வாக்கியத்திற்கும் கிடையாது. இதை ஒன்றை மட்டும் வைத்தே தங்களது 23வருட நபித்துவ வாழ்க்கையில் இறைத்தூதர் (ஸல்) இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள். இஸ்லாத்தின் ஏனைய எந்த ஒரு அம்சத்தையும் பிரச்சார வழிமுறையாய் அண்ணல் நபி (ஸல்) கையிலெடுக்கவில்லை. அனைத்து நபிமார்களும், "என் சமூகமே அல்லாஹ்வை வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்றும் "அல்லாஹ்வை வணங்குங்கள் தாகூதை விட்டும் விலகி இருங்கள்!" என்றும்தான் பிரச்சாரம் செய்தார்கள்.

அல்லாஹ்வை விட்டும் வணங்கப்படும் கல், மரம், சிலை, மாடு, கழுதை, உயிருள்ள மனிதன். இறந்து போனவன், சூரியன், ஏனைய நட்சத்திரங்கள் போன்று அனைத்தும் "தாகூத்" எனப்படும்.

உண்மையில் அந்தந்த நபிமார்களின் சமூகத்தில் எல்லாத் தீமைகளும் இருந்தன. ஆனால் எல்லா நபிமார்களும் கலிமா தய்யிபாவையே போதித்தார்கள். அது மட்டுந்தான் எல்லா தீமைகளையும் வேரறுக்கக் கூடியது.

அன்றைய அரபு தீபகற்பத்தில் ஷிர்க்கும் இருந்தது. ஏனைய அனாச்சாரங்களும் இருந்தன. விபச்சாரத்தை ஒழிக்கவும் மதுவிலக்கை கொண்டு வரவும் இறைத்தூதர் (ஸல்) ஓர் இயக்கத்தை உருவாக்கவில்லை. அப்படி தீமைகள் ஒழிப்பு இயக்கம் என ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருந்தால் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இருந்த வெறுப்பும் எதிர்ப்பும் அந்தளவிற்கு ஏற்பட்டு இருக்காது. இணைவைப்பை (ஷிர்க்கை) விமர்சித்ததைத்தான் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஏனைய அனாச்சாரங்களை ஒழிக்க இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆசை இல்லாமல் இல்லை. ஒரு வேளை இப்படி செய்திருந்தால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது வெறுப்பும் ஏற்பட்டு இருக்காது. அதேசமயம் இஸ்லாமும் வளர்ந்திருக்காது. உண்மையில் இஸ்லாம் எதிர்ப்பிலேயே வளர்ந்திருக்கின்றது. பொய்க் கடவுளர்களைக் கொண்டு மக்களை நம்ப வைத்து அதை வைத்தே மக்களை தமக்குக் கீழே அடிமைகளாக நடத்திக் கொண்டிருந்தனர், அன்றைய தலைவர்கள். அவ்வேளையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதுவையும் விபச்சாரத்தையும் இன்னபிற தீமைகளையும் ஒழிப்பதையே முன்னிறுத்தி போராடி இருந்தால் அத்தலைவர்களது எதிர்ப்பிற்கு ஆளாகி இருக்கமாட்டார்கள். இது ஏனென்றால் அப்போராட்டம் அவர்களது தலைமைக்கும் பதவிக்கும் இது எவ்விதத்திலும் ஆபத்து ஏற்படுத்தாது. ஷிர்க்கை எதிர்த்த போது தான் தம் தலைமைக்கே இது வேட்டு வைக்க கூடியதாக உள்ளது என்பதை உணர்ந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களை எதிர்த்தார்கள், துன்பம் தரலானார்கள், நாடு கடத்தினார்கள், கொலை செய்யவும் முற்பட்டார்கள்.

எந்த கற்சிலைகளை கடவுளர்கள் என்று மக்களை நம்ப வைத்து தமக்கு கட்டுப்படுபவர்களாக ஆக்கி வைத்திருந்தார்களோ அச்சிலைகள் கடவுள்கள் கிடையாது என்னும் போது எப்படி அத்தலைவர்களால் பொறுத்துக் கொள்ள முடியும். அவர்களது தலைமையையே பறிக்கக் கூடியதாக அல்லவா அது இருந்தது?

தலைமையும், அதிகாரமும் கையில் இருக்கும் போது எல்லா சமூக கேடுகளையும் ஒழிக்க அவர்களால் முடியும். ஆனால் அது அவர்களுக்கு எவ்விதத்திலும் உதவாது. சிலைகளை கடவுளர்களாக மக்களை நம்பவைக்கும் போதுதான் அத்தலைவர்களுக்கு பற்பல வழிகளில் செல்வமும் கிடைக்கின்றது செல்வாக்கும் கிடைக்கின்றது. உலகம் முழுவதும் இதுதான் இன்றும் நடந்து கொண்டு இருக்கிறது.

ஒரு வேளை நபி (ஸல்) ஏகத்துவ கலிமாவை மொழியாமல் மற்ற மற்ற தீமைகளை ஒழிக்க முற்பட்டு இருக்கலாம். அது பெரிய ஒரு வெற்றியை தந்திருக்காது. நபித்துவம் கொடுக்கப்படுவதற்கு முன்னால் இளைஞராக இருந்த போது "ஹில்புல் ஃபுஜுல்" எனும் சமூகநல சீர்திருத்த இயக்கத்தில் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளார்கள். குலச் சண்டைகள், கோத்திரப்போர்களைத் தடுப்பது, வறியவர்களுக்கு உதவி புரிவது, வழிப்பறியைப் போக்குவது, திருட்டைத் தடுப்பது போன்ற எத்தனையோ நற்பணிகளை அவ்வியக்கம் நடத்திக் கொண்டிருந்தது.

அது போல் ஒரு நற்பணி இயக்கத்தை தோற்றுவித்து அதில் பல மக்களை இணைத்து அதன் மூலமாக இஸ்லாமை எடுத்துச் சொல்லி இருக்கலாம். பொதுவாக நல்ல விஷயங்களில் மக்களின் ஒத்துழைப்பு இருக்கும். ஆனால் இதில் தலைமைக்கு கட்டுபடுதல் என்று அம்சமே இருக்காது. ஒரு கட்டுக் கோப்பு இருக்காது. அர்ப்பணிப்பு இருக்காது. தியாக மனப்பான்மை காணப்படாது. ஏதாவது ஒரு பிரச்னை, கஷ்டம் என்று வந்து விட்டால் உறுதிப்பாடு இருக்காது. கழன்று விடுவார்கள். பொது நலன் கருதி ஏதாவது ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது தனக்கு நஷ்டம் ஏற்படுத்தும் என்று கருதும் எந்த ஒரு தனிமனிதனும் அதை ஆட்சேபிக்காமல் இருக்க மாட்டான். விரும்பினால் அதை விட்டு விலகியும் விடுவான்.

நன்மைகளை செய்கிறோம். தீமைகளுக்கு எதிராக போராடுகிறோம் என்று மக்களை ஒன்றிணைத்து பின்னர் படிப்படியாக இஸ்லாமை பிரச்சாரம் செய்யலாமே என்று நாம் நினைக்கலாம். இதுவும் சரியான வழிமுறை அன்று!. ஒரு வேளை ஏதாவது ஈமானிய சோதனை ஏற்பட்டால் அப்படி இஸ்லாமிற்குள் வருபவர்களிடம் ஈமானிய உறுதி இஸ்திகாமத் நிலைகுலையாமை தென்படாது.

ஏகத்துவ கலிமாவை சொல்லித்தான் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள். அதன் ஆழ, அகலத்தை நன்றாக விளங்கிக் கொண்டபின்புதான் குறைஷித் தலைவர்கள் எதிர்த்தார்கள்.

ஒரு முறை அபு ஜஹ்லிடம் அவனைச் சார்ந்த கூட்டத்தாரில் ஒருவன் இப்படி கேட்டான். "நீங்கள் ஏன் முஹம்மதை இந்தளவிற்கு எதிர்க்கிறீர்கள்?. அவர் ஒன்றும் அன்னியர் கிடையாதே. உங்கள் சித்தப்பா மகன் தானே! அவர் சொல்வதை கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது?" அதற்கு அபுஜஹ்ல் "அவர் சொல்வது உண்மைதான்!. ஆனால், அவர் தன்னை எப்படி அறிமுகப்படுத்துகிறார் தெரியுமா? தன்னை ரசூலுல்லாஹ் அல்லாஹ்வின் தூதர் என்று பிரகடனப்படுத்துகிறார். அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா? அவர் "நில்" என்றால் நிற்க வேண்டும், "உட்கார்" என்றால் உட்கார வேண்டும். இது என்னால் முடியாது!" என்று கூறினான்.

இது தான் அவர்கள் புரிந்து கொண்ட இஸ்லாம்! அதனால் கடுமையாக எதிர்த்தார்கள். எங்கே தம்மை விட்டும் தலைமை போய்விடுமோ என்று அஞ்சினார்கள்.

இஸ்லாமை சொல்லும் போது அடி விழும். உதை வாங்க நேரிடும். அப்பொழுது தான் நாம் உண்மையான இஸ்லாமைச் சொல்கிறோம் என்று பொருள்!. அனைத்து நபிமார்களும் இஸ்லாமை சொன்ன போது எதிர்ப்பு இல்லாமல் இருந்தது இல்லை. இஸ்லாமை சொன்ன போது நபி (ஸல்) அவர்களுக்கும் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. இது எப்பொழுது ஏற்படும் என்றால் அல்லாஹ்வை விட்டு விட்டு மற்றவைகளை வணங்காதீர்கள் என்று நாம் பகிரங்கமாக பிரச்சாரம் செய்யும் போது தான் ஏற்படும்!. அப்பொழுது நாம் சிறையிலடைக்கப்படலாம். சொல்லணா துன்பங்களுக்கு ஆளாக நேரிடலாம். நமது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். இஸ்லாமை இப்படித்தான் அறிமுகப்படுத்த வேண்டும்!. நபிமார்கள் வாழ்க்கையிலிருந்து படிப்பினையாக இதனையே பெறுகிறோம்!!.

இறைத்தூதர் யூசுஃப் முதன் முதலில் இஸ்லாமிய பிரச்சாரம் எப்படி செய்தார்கள்? பல தெய்வங்கள் இருப்பது சிறந்தனவா? அல்லது யாவற்றையும் அடக்கி ஆளும் (ஏகன்) அல்லாஹ்வா? என்றுதானே சிறைவாசிகளிடம் இஸ்லாமை அறிமுகப்படுத்தினார்கள்.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் எப்படி இஸ்லாமை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள்?. மலைக்குன்றின் மீத ஏறி அல்லாஹ்வை அஞ்சுங்கள், அவனை மட்டும் வணங்குங்கள், வேறு யாரையும் வணங்காதீர்கள். மறுமை நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று தானே சொன்னார்கள்!.

உடனே நபி (ஸல்) உடைய நெருங்கிய உறவினரான சொந்த சித்தப்பாவே நாசமாய் போவாயாக! என்று திட்டியதை நாம் வரலாற்றில் பார்க்கிறோம்.

ஆக நாம் கலிமா லாயிலாஹ இல்லல்லாஹ் வையே மக்களிடம் முதலில் கொண்டு செல்ல வேண்டும்.

அருமைச் சகோதரர்களே! பிறவியிலேயே எல்லா மனிதர்களின் சிந்தனையிலும் ஒருவன் மட்டுமே இறைவனாக இருக்க முடியும் என்கிற கருத்து பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பிற்கு இரண்டு ஆசிரியர்கள், ஒரு வண்டிக்கு இரண்டு ஓட்டுநர்கள் என்பது ஒரு சாதாரண மனிதனால் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி இருக்கும் போது மாபெரும் இந்த உலகில் ஒன்றுக்கும் அதிகமான கடவுளர்கள் இருக்கிறார்கள் என்பதை எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார். இதை நபி (ஸல்) அவர்கள் ஒரு ஹதிஸில் தெளிவாகவே சொல்லி இருக்கிறார்கள்.

"உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கையான (ஒருவன் மட்டுமே இறைவனாக இருக்க முடியும் என்கிற சிந்தனை) மார்க்கத்தில்தான் பிறக்கிறது. ஆனால் அதன் தந்தையோ யூதனாகவோ, கிறித்தவனாகவோ தீயை வழிபடுவனாகவோ வளர்த்து விடுகிறான்".

அல்லாஹ்வை விட்டு விட்டு மற்றவற்றை வணங்கும் ஒவ்வொரு மனிதனும் தன் உள்ளத்தில் தான் மனசாட்சிக்கு விரோதமாய் நடக்கிறோம் என்பதை உணரவே செய்கிறான். ஆனால் அவனால் எதையும் மாற்றிக் கொள்ள முடியவில்லை. தான் சரியான வழியில் தான் இருக்கிறோம் என்கிற ஊசலாட்டத்தை அவன் உள்ளத்தில் ஷைத்தான் ஏற்படுத்தி விடுகிறான். புற உலகை பார்க்கிறான். உலகின் பெரும் பாலான மக்கள் இவன் செய்வதையே செய்து கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மை மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். அவ்வளவு மக்கள் தவறான வழியில் இருக்கமாட்டார்கள், என்று எண்ணுகிறான். தன் மனதை தேற்றிக் கொண்டு உள்ளத்தின் உறுத்தலுடனேயே, மனசாட்சிக்கு விரோதமாய் தொடர்ந்து ஷிர்க் செய்கிறான்.

அதே போல் அவனுக்கு தன் தாய், தந்தையர், முன்னோர்கள் மீது அளப்பரிய மரியாதை இருக்கின்றது. இயல்பாகவே ஒவ்வொரு மனிதனிடமும் இத்தன்மை இருக்கின்றது. இந்நிலையில் தம் முன்னோர்கள் நமக்கு தவறான வழியை காட்டியிருக்க மாட்டார்கள் என்று எண்ணுகிறான். தொடர்ந்து அதே ஷிர்க்கை செய்து வருகிறான்.

மனிதனை வழிகெடுக்க ஷைத்தான் பயன்படுத்தும் வழிமுறைகளில் இந்த இரண்டும் முக்கியமானது. இப்ராஹிம் (அலை) முஹம்மத் (ஸல்) போன்று மிகச் சிலர் தான் முயன்றார்கள். மற்றபடி சாதாரண மனிதர்கள் எல்லோரும் இவ்வுலக இன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்ற ஆசையிலேயே தங்கள் உழைப்பையும், நேரத்தையும் செலவழித்துக் கொண்டிருக்கும் போது உண்மையான இறைவனைப் பற்றி சிந்திக்க நேரம் எங்கிருக்கின்றது? அப்படியே கொஞ்சம் சிந்திக்க முற்பட்டாலும் ஷைத்தான் இவ்விரு வழிமுறைகளையும் பயன்படுத்தி அவனை வழிகேட்டிலேயே நிலைக்கச் செய்து விடுகிறான்.நாம் அவனுக்கு எடுத்துச் சொல்லும் போது மறந்து கிடக்கும் அவனை எழுப்புகிறோம். நமது நினைவூட்டலும், அவனது மனசாட்சியும் ஒரு கட்டத்தில் ஒன்று சேர்ந்து இஸ்லாமைத் தழுவி விடுகிறான். இது கலிமா தய்யிபாவை சொல்லும் போது தான் ஏற்படும். மற்ற மற்ற சிறப்பம்சங்களை காட்டிலும் இஸ்லாத்தின் இந்த அடிப்படையை மையப்படுத்தி இஸ்லாமை

Saturday, July 19, 2008

பைபிளில் மறைக்கப்பட்ட இயேசுவின் குழந்தை அற்புதம்


இயேசுவின் வரலாற்றை நான்கு நபர்களால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் பைபிளில் அவரைப்பற்றிய உண்மையான சில செய்திகளுடன், பல பொய்யான தகவல்களும், அவரது புனிதத்தன்மைக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் நிறைந்து காணப்படுவதோடு அவரது வாழ்வில் நடந்த பல முக்கியமான சம்பவங்கள் மறைக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன என்ற உன்மையை நாம் கவனித்தாக வேண்டும். குறிப்பாக,
தந்தையே இல்லாமல் இறை அற்புதத்தின் மூலம் பிறந்த அவருக்கே தந்தை வழி வம்சாவளியைச் சொல்ல முற்பட்டது,
ஒருவர் என்றில்லாமல் இருவர் அவருக்கு தந்தைவழி வம்சத்தை சொல்ல முற்பட்டதுடன் அதை முரண்பாடாகவும் - குழப்பமாகவும் சொல்லி அவருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்தது,
அவரது முன்னோர்களில் பலர் விபச்சாரர்கள் என்று பொய்யுரைத்ததுடன் அதன் மூலம் இயேசுவின் பரிசுத்தத் தன்மையையே கேள்விக்குறியாக்கியது,
தந்தை இல்லாமல் இறை அதிசயத்தின் மூலம் பெற்றெடுத்த தியாகப்பெண்மணியாம் தனது தாய் மரியாளை தரக்குறைவாக அவர் நடத்தினார் என்று காட்ட முயற்சித்தது,
இறைவனுடைய வழிகாட்டுதலுடன் மக்களை நேர்வழிப்படுத்த வந்த அவரே தன்னிடம் கேள்விக்கேட்டவர்களை இன்றைய கேடிகள் போலும் ரௌடிகள் போலும் மிக மிகத் தரக்குறைவாக - அவர்களையும், அவர்களின் பெற்றோரையும் கடும் சொற்களால் திட்டியதாக சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள்,
இயேசு மதுபானப்பிரியராக இருந்ததாக காட்ட முயற்சித்தது,
அவர் முன்கோபியாக - சம்பந்தமில்லாத விஷயங்களுக் கெல்லாம் கோபப்படுபவராக இருந்தார் என்று காட்ட முயற்சித்தது
தனது தந்தையின் மரணத்தில் கலந்துக்கொள்ள அனுமதி கேட்ட தனது சீடனை அதில் கலந்துக்கொள்ள விடாமல் தடுத்து, மனித உரிமையை மீறியவராக காட்ட முயற்சித்தது,
குறிப்பாக கடவுள் ஒருவரே என்று ஓரிறைக் கொள்கையைப் போதித்தவரையே கடவுளாக காட்ட முயற்சித்ததுடன், அவரை வைத்தே அந்தக் கொள்கைக்கு சமாதி கட்டியது,
இவை எல்லாவற்றையும் மீறி அவரது வரலாறு உன்மையிலேயே நடந்ததா? அல்லது இயேசு என்பது ஒரு கதாப்பாத்திரமா? என்று பல வரலாற்று ஆய்வாளர்களே சந்தேகம் எழுப்பும் வகையில் முரண்பாடான - குழப்பமான தகவல்களைக் கொடுத்து அவரது புனிதத்தன்மைக்கே மாசு கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டது போன்ற எண்ணற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்; இயேசுவின் வரலாறு என்றப்பெயரில் அவருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இன்றைய பைபிளில் நிறைந்து காணப்படுகின்றது.
இவை போன்ற எண்ணற்ற தவறான - இட்டுக்கட்டப்பட்ட செய்திகளின் உன்மைகளை தெரியப்படுத்தும் முகமாகத்தான் வல்ல இறைவன் தனது இறுதி வேதமான திருக்குர்ஆனை இறுதி நபி மூலம் இறக்கி வைத்து சத்தியத்தை வெளிப்படுத்தினான்.இப்படிப்பட்ட மறைக்கப்பட்ட உன்மைகளில் ஒன்றுதான் பைபிளில் சொல்லப்படாத இயேசுவின் குழந்தை அற்புதம். அதை திருக்குர்ஆன் அதன் பல்வேறு வசனங்களின் மூலம் தெளிவுபடுத்துகின்றது.இயேசுவின் வாழ்வில் நடந்த மிக முக்கியமான ஒரு சம்பவம். அதுவும் இயேசுவின் பரிசுத்த தாயான கன்னிப்பெண் மரியாள், தான் திருமணம் முடிக்காத நிலையில் - அவரை எந்த ஒரு ஆணும் தீண்டாதிருக்கும் பொழுது இறை அதிசயத்தின் மூலம் இயேசுவை பெற்றெடுக்கின்றார். அதுவரை இந்த உன்மை இறைவனையும் (அவனால் அறிவிக்கப்பட்டவர்களைத்) தவிர வேறு யாருக்கும் தெரியாதிருக்கும் நிலையில், அன்றைய கால மக்கள் முன் திடீரென திருமணமாகாத ஒரு கண்ணிப்பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வரும் பொழுது என்ன நினைப்பர்? அதுவும் பெண் மக்களையே இழிபிறவிகளாக எண்ணிக்கொண்டிருந்த யூத சமூகத்திற்கு முன்னால் ஒரு பெண் திருமணம் முடிக்காத நிலையில் ஒரு குழந்தையுடன் வந்தால் எந்த நிலைக்கு ஆளாகி இருப்பார்? சிந்தித்துப் பாருங்கள்!விபச்சாரத்தின் மூலம் பெற்றெடுத்தாயா? என்றிருப்பார்கள். அதற்கான தண்டனை வழங்கியே ஆகவேண்டும் என்று கூக்குரலிட்டிருப்பார்கள். காரணம் இயேசுவின் காலத்தில் ஒரு பெண் விபச்சார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவளைக் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது. (பார்க்க யோவான் 8:3-5) அவ்வளவு ஏன்? விஞ்ஞானம் வளர்ந்த இன்றை காலத்தில் கூட ஒரு பெண்ணிற்கு இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டாலும் இது தான் நடக்கும். இந்த சந்தேகம் தான் வரும். இது இயல்பான ஒன்று. ஆனால் மரியாள் அவர்கள் அது போன்ற தண்டனையிலிருந்தும், இப்படிப்பட்ட அவதூறு பேச்சுகளிலிருந்தும் தப்பித்துள்ளார் என்றால் அது எப்படி சாத்தியமானது?பைபிளில் இயேசுவைப் பெற்றெடுத்த பிறகு மேற்கூறப்பட்ட எந்தப் பிரச்சனையையும் மரியாள் சந்திக்கவில்லை என்று ஒத்துக்கொள்கின்றது. அவர் மேறகூறப்பட்ட பிரச்சனைகள் எதையும் சந்தித்ததாக பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லை. ஆனால், திருமணம் முடிக்கப்படாத - கண்ணிப்பெண்ணான அவர் இப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலிருந்து தப்பித்த வரலாற்றை பைபிளில் சொல்லப்படவில்லையே அது ஏன்? அது திட்டமிட்டு மறைக்கப்பட்ட மர்மம் என்ன? இயேசுவின் வரலாற்றை பைபிள் முழுமையாக சொல்கின்றதென்றால் அவரது வாழ்வில் நடந்த மிக முக்கியமான சம்பவமான இதுவும் சொல்லப்பட்டிருக்க வேண்டுமே! அது சொல்லப்படவில்லையே! அது ஏன்? இது தான் நியாய சிந்தனையுடைய எல்லோருக்கும் ஏற்படும் கேள்வி.அப்படிப்பட்ட மிக முக்கியமான - பைபிளில் சொல்லப்படாத இந்த வரலாற்று உன்மையை -நமக்கெல்லாம் ஏற்படும் அந்த நியாயமான கேள்விக்கான விடையை திருக்குர்ஆனின் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். இது தான் திருக்குர்ஆனுக்கும் பைபிளுக்கும் உள்ள வித்தியாசம். விளக்கத்திற்கு வருவோம்:அல்லாஹ் கூறுகின்றான் :வானவர்கள் மரியமிடம் கூறினார்கள்: நிச்சயமாக இறைவன் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகன் பிறக்கப்போவது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அவர் பெயர் மஸீஹ், மர்யமின் மகன் ஈஸா (மரியாளின் மகன் இயேசு) என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார். (அல்குர்ஆன் 3:45)அதாவது திருமணம் முடிக்காத கண்ணிப்பெண்ணான மரியாளிடம் இறைவன் புறத்திலிருந்து இந்த சுபச் செய்தி சொல்லப்படுகின்றது. இந்த செய்திகுறித்து அதிர்ச்சியுற்ற பரிசுத்த மரியாள் 'இது எப்படி சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்புகின்றார். அதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு தெரிவிக்கின்றது :(மர்யம் இறைவனிடம்) கூறினார்: 'என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?' (அதற்கு) அவன் கூறினான்: 'அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் 'ஆகுக' எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.' (அல் குர்ஆன் 3:47)இந்த உறையாடல் நடந்தப் பிறகு மரியாள் கர்ப்பம் அடைகின்றார். இறைவனின் வல்லமையை அவரது கருவறை உணர்கிறது. அதை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது :அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார். பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார். -அல்குர்ஆன் 19:22பின்னர் மரியாள் குறிப்பிட்ட காலத்தில் இயேசு அவர்களைப் பெற்றெடுக்கின்றார்.அதன் பிறகு குழந்தையுடன் தன் சமூகத்து மக்களிடத்தில் வருகின்றார். அதன் பிறகு நடந்தது பற்றி குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
'ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை' (என்று பழித்துக் கூறினார்கள்).(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார். 'நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?' என்று கூறினார்கள்.'நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான். இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.'இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.'என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.'இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்' என்று (அக்குழந்தை) கூறியது. - அல்குர்ஆன் 19:28-33அவரது சமூகத்துமக்களுக்கு ஏற்பட்ட இயல்பான அந்த சந்தேகத்தை, குழந்தையாக இருந்த இயேசுவைப் பேச வைத்ததன் மூலம் அவர்களுக்கு உன்மையை உணர்த்தினான் இறைவன். ஆதனால் தான் மரியாளையும் அந்தக் குழந்தையையும் அந்த சமூகம் அங்கீகரிக்கின்றது.குர்ஆன் சொல்லக்கூடிய இந்த சம்பவம் பைபிளில் சொல்லப்படவில்லையானாலும் நியாயமாக சிந்தித்தால் குர்ஆனில் சொல்லப்பட்ட இந்த சம்பவம் கண்டிப்பாக நடந்திருக்கும் - நடந்திருக்க வேண்டும் என்பதை நியாய சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. காரணம், ஒரு கண்ணிப்பெண், அதுவும் திருமணமாகாதவர் ஒரு குழந்தையுடன் வந்தால் எந்த சமூகம்தான் சந்தேகக்கண் கொண்டு பார்க்காது? கண்டிப்பாக குர்ஆன் சொல்வது போல் இந்த சம்பவம் நடந்தே இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அது போன்ற இக்கட்டான நிலையிலிருந்த மரியாள் தப்பித்திருக்கின்றார். அது எப்படி?இதற்கு பைபிளில் விடையிருக்கின்றதா என்றால் கண்டிப்பாக இல்லை என்பது தான் பதில்.பைபிளில் சொல்லப்படாத - மறைக்கப்பட்ட இந்த உண்மைகளையெல்லாம் விளக்கிவிட்டு இறைவன் சொல்கின்றான்:இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்). எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்). - அல்குர்ஆன் 19:34இது போண்ற இயேசுவின் உன்மைநிலை பற்றிய எண்ணற்ற கேள்விகளுக்கான விடை திருக்குர்ஆனில் மட்டும் தான் இருக்கின்றது சகோதரர்களே.இது ஒருபுறமிருக்க இந்த சத்தியமான வரலாற்று உன்மை பைபிளில் சொல்லப்படவில்லை என்பதையும் திருக்குர்ஆன் இதற்கு மிகத் தெளிவாக விளக்கமளித்து உள்ளதையும் ஏற்க மறுக்கும் சில கூலிக்கு மாறடிக்கும் கும்பல் தங்களைச் சார்ந்தவர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக - தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக் கொள்வதற்காக மறுப்பு என்றப் பெயரால் சில மடத்தனங்களை எழுதி வெளியிட்டுள்ளனர். அதற்கான மறுப்பையும் தெளிவான விளக்கத்தையும் இங்கு பார்ப்போம்.கிறிஸ்தவர் எழுதுகிறார்:// 1. ஒரு நாள் குழந்தை அல்லது சில நாள் குழந்தை பேசுவது என்பது, உலக அதிசயம்: குர்-ஆன் சொல்வது போல, மரியாள், குழந்தையை கொண்டுவருகிறார்கள், யூத ஜனங்கள் கேள்விகள் கேட்கிறார்கள், உடனே குழந்தை பேசுகிறது. என்னவாகியிருக்கும், இதை பார்க்கும் ஜனங்கள் தலை தெரிக்க ஓடியிருப்பார்கள், ஏதோ விபரீதம் நடக்கிறது என்றுச் சொல்லி ஓடி ஒளிந்துயிருப்பார்கள். சிலருக்கோ இதயமே நின்றுயிருக்கும். எல்லாரும் பயந்து போய், நடுங்கியிருப்பார்கள். //நமது பதில்:ஒரு அதிசயம் நடக்கும் போது அதை ஆச்சரியத்தோடு பார்ப்பார்களா அல்லது இவர் சொல்வது போல் பயந்து ஓடிப்போய் ஒளிவார்களா? இவர் வாதப்படி பார்ப்போமேயானால், இயேசு எத்தனையோ அதிசயங்களை செய்தாக பைபிள் சொல்கின்றது. அதைப் பார்த்து எல்லா மக்களும் ஓடிப்போய் ஒளிந்தார்கள் என்று சொல்ல வருகின்றாரா? குழந்தை அதிசயம் என்ன! இயேசு மரணித்தவரையே இறைவனின் உதவி கொண்டு உயிர்பித்ததாக பைபிள் சொல்கின்றதே. அப்பொழுது எல்லா மக்களும் ஆ! பேய்! பேய்! என்றல்லவா ஓடி இருக்க வேண்டும். அப்படி ஓடினார்களா? ஒடிப்போய் ஒளிந்து கொண்டார்களா? அல்லது யாரும் இதயம் நின்றநிலையில் இருந்தார்களா? இது போன்று மக்களை ஓடிப்போய் ஒளிய வைப்பதற்காகவா கடவுள் அதிசயத்தைக் தனது தூதர்கள் மூலம் நிகழ்த்துகின்றார்? சிந்திக்க வேண்டாமா? எதையாவது எழுதவேண்டும் என்பதற்காக உளறி வைக்கக்கூடாது நண்பர்களே!கிறிஸ்தவர்://2. இயேசுவை சிறுவயதிலிருந்தே ஒரு தெய்வீக புருஷராக மதித்துயிருப்பார்கள், அவரை எதிர்த்து, சிலுவையில் அறைந்து (குர்-ஆன் படி சிலுவையில் அறைய பிடிக்க சென்று) இருக்க மாட்டார்கள். பிறந்த குழந்தை இப்படிப்பட்ட அற்புதம் செய்யுமானால், அந்த குழந்தையை ஒரு சாதாரண குழந்தையாக பார்க்கமுடியாது. இயேசுவிற்கு சிறுவயதிலிருந்தே ஒரு தனி மதிப்பு, மரியாதை, புகழ் எல்லாம் கிடைத்துயிருக்கும். காணிக்கைகள், பணம் என்று பரிசுகளைக் கொண்டுவந்து பலவாறு தங்கள் நம்பிக்கையை அக்குழந்தை மீது காட்டியிருப்பார்கள். //நமது பதில்:என்ன மடத்தனமான கேள்வி இது. பைபிளைபற்றி தெரியாதவர் கேட்பது போல் கேள்வி கேட்டுள்ளார். இயேசு சிறுவயதில் செய்த அற்புதத்தை விட்டுவிடுவோம். அவரது 30 வயதிற்குப் பிறகு இறந்தவனையே உயிரோடு எழுப்பினாரே! அதற்கு மேலும் எத்தனையோ அதிசயங்களை மக்கள் முன் செய்துக் காட்டினாரே. அப்படி நடந்தும் தானே அவரை பைபிளின் படி துன்புறுத்தினார்கள், சிலுவையில் அறைந்தார்கள்.'காணிக்கை, பணம், மதிப்பு மரியாதைஎல்லாம் வந்திருக்கவேண்டுமே' என்று கேட்கின்றார். அவர் செய்த அதிசயங்களை நேரடியாக பார்த்தவர்களான இயேசு வோடிருந்த சீடர்களே சரியான முறையில் விசுவாசிக்காமல் இருந்ததாக பைபிளே சொல்லும் பொழுது, இந்த அதிசயத்தை எல்லாம் நேராக பார்த்தவர்களில் ஒருவரான யூதாசே நன்றி இன்றி அவரைக் காட்டிக்கொடுத்ததாக பைபிளே ஒத்துக்கொள்ளும்பொழுது இந்தக் கேள்வி கேட்க எப்படி மனம் வருகின்றது உங்களுக்கு? அப்படியானால் இயேசுவிற்கு காணிக்கை, மரியாதை எதுவும் வரவில்லை என்பதற்காக அவர் அதிசயமே செய்யவில்லை என்று சொல்லவருகின்றீர்களா? உங்கள் நம்பிக்கைக்கு உட்பட்டு மறுப்பெழுதுங்கள். எதிர்த்து எழுத வேண்டும் என்பதற்காக எதையாவது எழுதி மாட்டிக்கொள்ளாதீர்கள்!கிறிஸ்தவர்://நீங்கள் சொல்வது போல, பெரியவராக ஆனபிறகு செய்த அற்புதங்களுக்கு வேறு அர்த்தங்கள் சொன்னாலும், இந்த அற்புதம் வைத்துக்கொண்டு எல்லாம் சாதித்துவிடலாம். ஆனால் நடந்தது என்ன? ஒரு சாதாரண தச்சனின் மகனாக நடுத்தர வாழ்வை வாழ்ந்தார் இயேசு. எந்த வசதியில்லாமல் வாழ்ந்தார். இயேசு செய்த அற்புதங்களைப் பார்த்த ஆசாரியர்கள், யூத மக்கள், இவனுக்கு எப்படி இந்த வல்லமை கிடைத்தது, இவன் தச்சனின் குமாரன் அல்லவா? என்று ஆச்சரியப்பட்டார்கள்(மாற்கு: 6: 1-3). இன்னும் குர்-ஆன் சொல்வது போல, குழந்தை அற்புதம் நடந்து இருக்குமானால், இவ்விதம் அவர்கள் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. இவன் தான் குழந்தையாக இருக்கும் போதே அற்புதம் செய்தவன் ஆயிற்றெ, இந்த அற்புதங்கள் என்ன புதுசா? என்றுச் சொல்லியிருப்பார்கள். எனவே, குழந்தை இயேசு அற்புதம் என்பது ஒரு கற்பனைக் கதையே தவிர வேறில்லை. //நமது பதில்:அதாவது குழந்தை அற்புதத்தை மறுப்பதற்காக என்ன மாதிரியெல்லாம் சிந்திக்கின்றார்கள் என்று புரிகின்றதா சகோதரர்களே! இயேசு பெரியவரான போதும் அதிசயம் செய்தார். அப்பொழுது மட்டும் அவர் வசதியுடன் வாழ்ந்து விட்டாரா? அவர் வசதியாக வாழவில்லை என்பதற்காக அவர் அதிசயம் செய்யவே இல்லை என்று சொல்ல வருகின்றீர்களா?ஒரு வாதத்திற்காக மாற்கு 6:1-3 ல் சொல்லப்பட்ட வசனத்தை ஆதாரமாக எடுத்துக்கொண்டாலும் அதுவும் இவரது கருத்துக்கு ஒத்துப் போகாது. ஏனெனில், இந்த மாற்கு வசனத்தின் படி எவர்கள் ஆச்சரியப்பட்டதாக இவர் எடுத்துக்காட்டுகின்றாரோ அவர்கள் தான் அவரை கொலைசெய்ய துடித்தார்கள். காரணம் அவர்கள் இயேசு செய்த எந்த அதிசயத்தையும் இறைவன் புறத்திலிருந்து வந்த அதிசயமாகவே எடுத்துக் கொள்ள வில்லை. அவரை இறைவன் புறத்திலிருந்து வந்தவராகவும் நம்பத் தயாராக இல்லை. நம்பத் தயாராகாதவர்களிடம் புதுசு பழசு என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்களுக்கு எத்தனை அதிசயம் செய்து காட்டினாலும் அவர்கள் நம்பப்போதில்லை. இவ்வளவு அதிசயங்களை செய்தப் பிறகுத்தான் இயேசு கொல்லப்பட்டதாக பைபிள் கூறுகின்றது.கிறிஸ்தவர்://இதற்கு பதில் சொல்லுங்கள், சுவிசேஷங்கள் எழுதிய சீடர்கள் இயேசுவின் எதிரிகளா? இல்லையே, தங்கள் தலைகளை இயேசுவிற்காக வெட்டித்தள்ள நீட்டியவர்கள். ஒருவேளை இந்த அற்புதம் நடந்துயிருக்குமானால், அதை எழுதுவதினால், தங்கள் மதிப்பு கூடுமே தவிர குறையாது. ஏன் ஒருவரும் சொல்லவில்லை, இயேசுவின் மீது கோபமா அல்லது இது ஒரு சாதாரண அற்புதமா? பின் ஏன் யாரும் எழுதவில்லை. காரணம் அது நடக்கவில்லை//நமது பதில்:பைபிளில் சொல்லப்பட்ட சுவிஷேங்களை எழுதியது இயேசுவின் சீடர்கள் என்று யார் சொன்னது? சுவிஷேஷ எழுத்தாளர்கள் இயேசுவின் சீடர்கள் அல்ல என்பதை பைபிள் ஆதரத்துடன் எத்தனையோ பைபிள் அறிஞர்களே ஒத்துக்கொண்ட உன்மையை நீங்கள் அறியாமல் இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. காரணம் மடமை உங்கள் அறிவை மறைக்கின்றது. மத்தேயு என்ற சுவிஷேஷத்தை எழுதியவர் இயேசுவின் சீடரான மத்தேயுவா? அல்லது யோவான் சுவிஷேஷத்தை எழுதியவர் இயேசுவின் சீடரான யோவானா? பைபில் ஆதாரத்துடன் உங்களால் நிரூபிக்க முடியுமா? மாற்கும் லுக்காவும் பவுலுக்கு வேண்டப்பட்டவர்களா அல்லது இயேசுவின் நேரடி சீடர்களா? பவுலும் பலுலைச் சார்ந்தவர்களும் இட்டுக்கட்டி எழுதியதே இன்றைய புதிய ஏற்பாடு என்பதை மறந்துவிடாதீர்கள். அவரின் உன்மையான வரலாற்றை மறைத்து விட்டு அவர் மீது இட்டுக்கட்டிய பொய்யான பல தகவல்களைக் கொண்டது தான் இன்றைய பைபிள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். இன்ஷா அல்லாஹ் அது பற்றிய விளக்கக்கட்டுரை விரைவில் நமது தளத்தில்...அடுத்து சகோதரர் தேங்கை முனீப் அவர்கள் மொழிபெயர்த்து இஸ்லாம் கல்வியில் வெளியிட்ட கட்டுரையில் கிறிஸ்தவர்களில் ஒரு சிலர் செல்லிவரும் பொய்களில் ஒன்றான பைபிளிலிருந்து குர்ஆன் காப்பியடிக்கபட்டது என்பதற்கு பல ஆதரங்களை முன்வைத்து மறுப்பெழுதியிருந்தார். (இன்ஷா அல்லாஹ் குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா என்பதற்கான மிகத் தெளிவான விளக்கம் விரைவில் நமது தளத்திலும் வர இருக்கின்றது) அவர் கொடுத்திருந்த எத்தனையோ ஆதரங்களில் இந்த 'குழந்தை அதிசயம்' என்ற ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு குர்ஆன் காப்பி அடிக்கப்பட்டதே என்று மறுப்பெழுதி இருந்தனர். அது எந்த அளவுக்கு மடத்தனமானது என்பதை சற்று அலசுவோம்:குர்ஆனில் சொல்லப்பட்ட குழந்தை அற்புதம் என்பது நபி (ஸல்) அவர்களுக்கு முன்பே பைபிளின் தள்ளுபடி ஆகாமங்களில் ஒன்றான (Gospel of Thomas) 'தோமாவின் சுவிஷேஷத்தில்' உள்ளதாகவும் அதிலிருந்து தான் நபி (ஸல்) அவர்கள் காப்பியடித்து எழுதினார்களே யொழிய இறைவனின் புறத்திலிருந்து ஒன்றும் புதிதாகச் அவர்களுக்குச் சொல்லப்படவில்லை என்கிறார். அதை பின்வருமாறு எழுதுகின்றார்://இஸ்லாம் கல்வி சகோதரர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான், அதாவது, இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட இந்த குழந்தையாக இருக்கும் போது பேசிய அற்புதம், மற்றும் களிமண் பறவையை உயிர் பெறச்செய்த அற்புதம், இவைகள் முகமது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை, மாறாக கிறிஸ்தவர்கள், யூதர்கள் எல்லாரும் தள்ளுபடி ஆகமங்கள் என்றும், இவைகள் இறைவனின் வெளிப்படுகள் அல்ல என்றும் ஒதுக்கி தள்ளிவிட்ட புத்தகங்களிலிருந்து அவர் காப்பி அடித்துள்ளார் என்பதை மட்டும் நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.//இது எவ்வளவு மடத்தனமான வாதம் என்பதை சாதாரணமாகவே நமக்கு விளங்கும். இயேசுவின் குழந்தை அதிசயம் இடம்பெறாத, கிறிஸ்தவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பைபிளே நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திற்கும் 200 ஆண்டுகளுக்கு பின்புதான் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது என்னும் போது தமிழ் உட்பட உலகின் ஏராளமான மொழிகளில் இன்றுவரையில் மொழிபெயர்க்கப்படாத தள்ளுபடி ஆகமங்களை பார்த்து காப்பிஅடிக்கபட்டது என்ற வாதம் எப்படி சரியாகும்? இவர் சொல்லக்கூடிய தள்ளுபடி ஆகாமங்கள் எழுதப்பட்டு கிட்டத்தட்ட 1800 ஆகிவிட்ட நிலையில் உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளில் அது இன்று வரை மொழிபெயர்க்கப்படவில்லை. காரணம் அதை பின்பற்ற வேண்டிய கிறிஸ்தவர்களே ஒதுக்கித் தள்ளிவிட்ட பிறகு வேறு யாருக்கும் அது தேவைப்படாத ஒன்று. அப்படி இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் இவர்களால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு ஆகாமம் எப்படிக் கிடைத்திருக்கும்? அதுவும் எழுதப்படிக்கத்தெரியாத நபி (ஸல்) அவர்கள், நீங்கள் சொல்லும் புழக்கத்தில் உள்ள இன்றைய பைபிளை விட்டு விட்டு தள்ளுபடி செய்யப்பட்ட - புழக்கத்தில் இல்லாத - ஆகாமங்களை எங்கிருந்து பெற்றார்கள்? ஒருவேளை நபி (ஸல்) காலத்தில் இன்று நீங்கள் தள்ளுபடி செய்யப்பட்ட ஆகாமங்கள் தான் கிறிஸ்தவர்களின் வேதமாக இருந்தது என்று சொல்லவருகின்றீர்களா?அடுத்து, இன்னொன்றையும் நாம் புரிந்துக்கொண்டாக வேண்டும். இன்று நடைமுறையில் உள்ள இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பைபிளை 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெரும் பெரும் கிறிஸ்தவ குருமார்களைத் தவிர வேறு யாரும் படிக்க முடியாது. அந்த அளவுக்கு மிகக் கடுமையாக பொதுமக்களைத் தடுத்து வைத்திருந்தார்கள். அந்த பைபிள்களோ மதகுருமார்கள் மட்டும் படிக்கும் வகையில் கிரேக்க, எபிரேயு மற்றும் லத்தீன் மொழிகளில் மட்டும் தான் இருக்கும். பாமரர்கள் யாரும் படித்துவிட முடியாத படி சங்கிலியால் கட்டி வைத்து பாதுகாத்தனர் என்றும் அப்படி மீறி படிக்க நினைக்கும் மதகுருமார்கள் அல்லாதவர்கள் பலர் சிலுவையில் அறையப்பட்டும் இன்னும் பல கொடுமைகளுக்கு ஆளாக்கபட்டும் துன்புறுத்தப்பட்டனர் என்று கிறிஸ்தவ வரலாறே நமக்கு சான்று பகர்கின்றது. இன்னும் சொல்லப்போனால் இந்த அவதூறு கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவான 'ப்ரொட்டஸ்டன்ட்' பிரிவே இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக இன்றிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது.இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பைபிளை படிப்பதற்கு அதைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்கே இந்த நிலைமை என்றிருக்கும் பொழுது, இவர்களால் தள்ளுபடி செய்யப்பட்ட ஆகாமங்களை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபி (ஸல்) அவர்கள் மட்டும் எப்படி காப்பி அடித்திருப்பார்கள்? யோசிக்க வேண்டாமா?எனவே உங்களது வரட்டு வாதங்கள் எல்லாம் உங்களைப் போன்ற குருட்டு நம்பிக்கை உடைய குறுமதியாளர்களைத் திருப்தி படுத்தவே உதவும் என்று சொல்லி முடிக்கின்றேன். வஸ்ஸலாம்..
.கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல..
Click here .இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல..
Click here .இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல...

Click here . Labels: , , , , ,